thoothukudileaks 29- 9-2023
Photo news by arunan journalist
தூத்துக்குடியில் ...அண்ணா பழைய பேருந்து நிலையம் பிரதமர் நரேந்திர மோடி ஜியின் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பழைய பேருந்து நிலையம் ஆனது புனரமைக்கப்பட்டு 57கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு... தயார் நிலையில்..பேருந்து நிலையம் இப்போது திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்
ஆனையர் இடம் இன்று மனு...
29-9-2023 இன்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு பாஜாகா வினர் தூத்துக்குடி மாநகராட்சி ஆனையர் தினேஷ் குமார் அவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் .
இது பற்றிய செய்தியாவது:-
ஏற்கனவே இந்த தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் இருக்கும்போது வெற்றி விநாயகர் ஆலயம் பேருந்து நுழைவு வாயில் பகுதியில் பல ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டுக் கொண்டிருந்தனர்.
வாக்குறுதி
அந்த வெற்றி விநாயகர் ஆலயத்தை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஆனது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதியதாக பேருந்து நிலையம் அமைப்பதற்கு அப்புறப்படுத்தி புதியதாக பேருந்து நிலையம் திறக்கப்படும் போது மீண்டும் அதே இடத்தில் வெற்றி விநாயகர் ஆலயம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.
தீடீர் மாயம்
அதன் படி புதிய தாக கட்டியிட பணி நடைபெற்று கொண்டு இருக்கும் போது கூட இடம் ஒதுக்கி அப்போது கிழக்கு பகுதியில் பிள்ளையார் கோயில் முன்று ஆண்டுகளாக இருந்தது இப்போது காணவில்லை.
இந்நிலையில் அந்த ஆலயமானது இன்னும் அமைக்கப்படாமல் பேருந்து நிலையம் ஆனது திறக்கப்பட உள்ளது
பழையபடி மீண்டும் வெற்றி விநாயகர் ஆலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று மாநகராட்சி ஆணையரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .
கறுப்பு கொடி !!!
பாஜக வின் இந்த கோரிக்கையை பரிசலிக்கப்படாவிடில் பேருந்து நிலையம் திறக்கும் நேரத்தில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் அறப்போராட்டங்கள் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை எடுத்துள்ளோம் என்கிறார்கள்.
இதுபற்றி தூத்துக்குடி செய்தியாளர்கள் இடம் பேட்டி அளித்துள்ளார்கள் .
இதில் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு தலைவர் ஓம் பிரபு, மனு அளித்தார்.
இந்நிகழ்ச்சியில்....
விவேகம் ஜி ரமேஷ் மாநில ஓபிசி அணி செயலாளர், வேல்முருகன் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரிவு & சக்தி கேந்திர பொறுப்பாளர், குமரி சத்தியசீலன் மாவட்ட செயலாளர், ராஜேஷ் கனி கிழக்கு மண்டல தலைவர் மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சனா. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட இந்து ஆலய பாதுகாப்பு கமிட்டி அணி தலைவர் அமைப்பாளர். மாரியப்பன் . . ஆலைய பாதுகாப்பு குழு மாவட்ட செயலாளர் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் வழக்கமான விஷயம் !!!
தூத்துக்குடி யில் அண்ணா பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் பஸ் நுழைவு வாயில் பகுதியில் பிள்ளையார் கோயில் வழக்கமாக இருக்கிறது.!!!
பரபரப்பு ...
தற்போது .. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் 2019 ஆண்டு இடிக்கப்பட்டு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநில அரசு
4 1/2ஆண்டுக்கு மேலாக...
கட்டி முடிக்கப்பட்டு திறக்கும் தருவாயில்
ஏற்கனவே இருந்த பிள்ளையார் கோயில் அங்கே இல்லை பிள்ளையார் கோவில் வைக்க வேண்டும் என கூறி தூத்துக்குடி பாஜாகா கட்சி யினர் கொடி பிடித்துள்ளது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக