ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

அக்கா -தம்பி ஈகோ யுத்தம் மாநகரில் தள்ளாடும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி க்குள்ளாகும் கதை

thoothukudileaks 10-4-2023

Article arunan 


 அக்கா -தம்பி ஈகோ யுத்தம்  மாநகரில் தள்ளாடும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி க்குள்ளாகும் கதையை பார்ப்போம் ....



தூத்துக்குடி மாநகரில்  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பொதுமக்கள் இடையூரின்றி செல்லவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்  மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப துணைக் காவல் கண்காணிப்பாளர் சத்தியராஜ்  வட்டார போக்குவரத்து அலுவலர், தமிழ்நாடு போக்குவரத்து கழக கிளை மேலாளர், போக்குவரத்து ஆய்வாளர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கூட்டம் 


முக்கியமாக மதுரை போன்ற பிற மாவட்ட மாநகராட்சியில் இருப்பது போல் இரவு 10மணி முதல் காலை7 மணி வரை மாநகரில் லாரி போன்ற கனரக வாகனங்கள் வந்து செல்ல வேண்டும்  என்று முடிவு எடுத்தனர்.


ஜெகன் பெரியசாமி
மாநகர மேயர்
தூத்துக்குடி மாநகராட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசினார்கள்.



தூத்துக்குடி நகரில் பகலில் எந்த நேரத்திலும் வர கூடாது
லாரி போன்ற கனரகங்கள் தூத்துக்குடி மாநகரத்து உள்ளே பகல் முழுவதும் வராமல் இரவு வருவதால் சாலையில் பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் குறையும் இதுதான் தூத்துக்குடி பொதுமக்களுக்கு நல்ல விஷயமாகவும் படுகிறது.

மேலும் இரவு 10 மணிக்கு மேல் லாரி போன்றவை வருவதும் போவதும் லோடிங் இறக்கி வைத்து கொண்டு இருப்பது 
ஜன நடமாட்டம் தென் படும் இதையொட்டி திருட்டு கொள்ளையர்கள் அச்சப் படுவார்கள் திருட்டு குறையும் வாய்ப்பு உள்ளது.
இதை செயல் படுத்தினால்..

தூத்துக்குடி நகரில் வாகனயோட்டிகள் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி ஒரளவு நிம்மதி கிடைக்கும் நம்பினார்கள்.



தூத்துக்குடி மாநகராட்சி க்கு நல்ல பெயர் கிடைக்கும் மேயர் ஜெகன் பெரியசாமி சேர்த்து தான் என்றனர். ஆனால்..?
நடக்க விட்டுருவோமா ஈகோ யுத்தம்
ஸ்டார்ட் ஆகிடுச்சு   கிளம்பினார்கள்.

உடனே அடுத்து வாரம் 3-4-2023 அன்று அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில்...
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆனையர் தினைஷ்குமார் ஜ அழைக்காமல்.. ?? தவிர்த்துவிட்டு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூட்டம் நடத்தினார் .


இதில் எஸ்.பி கலெக்டர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் அவர் பெயரில் ஒரு அறிவிப்பு வெளியிட பட்டதுதான் பரபரப்பு.

அறிவிப்பு 


அதில் தூத்துக்குடி நகரில் காலை 7டூ11 ...மாலை 4டூ 9 வரை தடை 

மற்ற இடைப்பெற்ற நேரங்களில் தூத்துக்குடி மாநகரில் வழக்கம் போல லாரி கனரகங்கள் வந்து செல்லலாம்  அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் கூட்டம் 


தூத்துக்குடி நகரில் உள்ளே நாலைந்து வியாபாரிகள் அரிசி போன்ற பொருட்கள் இறங்குவதற்காக ஒட்டு மொத்த தூத்துக்குடி பொதுமக்களும் பகலில் போக்குவரத்து நெரிசலை உட்பட வேண்டுமா என்று பொதுமக்கள் குமைந்து போய் தலைமையில் அடித்து கொண்டனர்

தூத்துக்குடியில்...

 இவங்க..
பெரிய ஆளு யாருன்னு பாார்க்கிறாங்க ???
அக்காவா ? தம்பியா?? மக்கள் பிரச்சினை யில் நல்ல அதிகாரி கள் இவங்க கூட ஒரு முடிவு எடுக்க முடியாமல் திண்டாடி கொண்டு இருக்கின்றன
தூத்துக்குடி மாவட்டம்  கனிமொழி எம்பி தான் இவங்க சந்தேகங்கள் தெளிவுபடுத்துனும் செய்வாரா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக