செவ்வாய், 21 மார்ச், 2023

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் தீடீர் மரணம் 30குண்டுகள் முழங்க தூத்துக்குடி காவல்துறை மலர்வளையம் அஞ்சலி

 தூத்துக்குடி மாவட்டம்: 21.03.2023


தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அவரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் மலர்வளையம் வைத்து 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் தகனம் நடைபெற்றது.

உயிரிழந்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி 


தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வந்த தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி (56) அவர்கள் 1989ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து ஆயுதப்படையில் பணிபுரிந்து கடந்த 2014ம் ஆண்டு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று சிறப்பாக பணிபுரிந்து வந்துள்ளார்.


இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி  நேற்று (20.03.2023) திடீர் உடல் நலக்குறைவால் காலமானார்.

மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி


 இதனையடுத்து அவரது சொந்த ஊரான சாமிநத்தத்தில் வைத்து இன்று (21.03.2023) அன்னாரது உடலுக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) . ஜெயராஜ் தலைமையில் போலீசார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.


அதனை தொடர்ந்து ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன், உதவி ஆய்வாளர்கள் திரு. மணிகண்டன், சங்கரலிங்கம், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள்  வெங்கடேஷ்,  வேல்முருகன், ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் நங்கையர்முர்த்தி உட்பட காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக