திங்கள், 23 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் பேரணி

thoothukudileaks 24-1-2023

photo news by shanmuga Sundaram 

தேசிய பெண் குழந்தைகள் தினம் பேரணி தூத்துக்குடியில் இன்று 24-1-2023 காலை நடைபெற்றது.



இதுபற்றிய செய்தியாவது:-

பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும், அவர்கள் வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துரைப்பதற்கும் ஜனவரி 24 இன்று  இந்தியாவில் கொண்டாடப்படுகிறது


தூத்துக்குடி மாநகரில் முக்கிய வீதிகளில் இன்று (24-1-2023)ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் தேசிய பெண் குழந்தைகள் தின பேரணி தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் இருந்து 200 மாணவிகளுடன் பேரணி தொடங்கியது.


பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளை காப்பது, ஒரு தலைமுறையை காப்பது ஆகும் போன்ற கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்து குருஸ் பர்னாந்து சிலை அருகில் முடிவடைந்தது. 


ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் Rev. Sis.  ரூபாவும் பேரணியில் கலந்து கொண்டார்.


JCI Pearlcity QueenBees -ன் தலைவர் JFM வழக்கறிஞர் வி. சுபாசினி பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மீது ஏவப்படும் துஷ்பிரயோகத்தை எப்படி ? தடுக்கலாம் என்பது பற்றியும் பெண் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தினர். 



இந்நிகழ்ச்சியில்  செயலாளர் Jc HGF. அ. ஆயிஷா இப்ராஹிம் மற்றும் துணைத் தலைவர் நிகழ்ச்சி Jc டி. சுதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

ஜேசிஐ பேர்ல்சிட்டி தலைவர் ஜேசி ஏ ராஜேஷ், மண்டல அதிகாரி ஜேசிஐ செனட்டர் ஆர்.ஸ்ரீதரன், மண்டல எஸ்எம்ஏ ஒருங்கிணைப்பாளர் ஜேசிஐ. செனட்டர் முத்துராமன் மற்றும் 

 பியர்ல் சிட்டி குயின் பீஸ் பட்டயத் தலைவர் Jc HGF  டி.ஜெர்லின் தினகரனும் துணைத் தலைவர் பயிற்சி JFM R. அஜிதா பிரபு, துணைத் தலைவர் மேலாண்மை Jc HGF A. மதுமிதா, துணைத் தலைவர் வர்த்தக Jc கிரேஸ் மற்றும் இயக்குநர்கள் Jc அ. பயஸ் ஷபிர், Jc அ. டிஸ்னி அன்டனி, Jc முபாராஷா  ஜேசிஐ பேர்ல்சிட்டி  பொன்ராஜா, பாலகிருஷ்ணன் 

ஹோலி கிராஸ் ஹோம் கல்லூரி இணைப் பேராசிரியர் டாக்டர் மதுரவள்ளி, பேராசிரியை கிருஷ்ணவேணி ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தனர்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் வரலாறு 

 இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும், பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பெண் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் ஜனவரி 24 இன்று அனுசரிக்கப்படுகிறது. 

பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துரைப்பதும், பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவம் உள்ளிட்ட விழிப்புணர்வை மேம்படுத்துவதும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கமாகும். 


தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள நோக்கம், இந்திய பெண்களுக்கு ஆதரவையும் வாய்ப்புகளையும் வழங்குவதாகும். 


இந்தியாவில் நாம் அறிந்தபடி, பாலின சமத்துவமின்மை என்பது கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும், மேலும் இது சட்ட உரிமைகள், கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற பல துறைகளில் உள்ளது. 



பெண் சிசுக்கொலை என்பது மற்றுமொரு முக்கிய பிரச்சினையாகும். 

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதற்கான இந்திய அரசின் நடவடிக்கை இளம் பெண்களுக்கான முன்னேற்றம் மற்றும் குழந்தை பருவத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவது என்பதில் சந்தேகமில்லை.


இந்தியா வில் தேசிய பெண் குழந்தைகள் தினம் முதன்முதலில் 2008 இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக