புதன், 8 ஜூன், 2022

நீர் நிலை ஆக்ரமிப்பு அகற்றப்படும் அமைச்சர் துரைமுருகன் அதிரடி ஸ்மார்ட் சிட்டி தூத்துக்குடி வளர்ச்சிக்கு இடைஞ்சலாக உள்ள தூத்துக்குடி மாநகராட்சி நீர் நிலைஆக்ரமிப்புகள் அகற்றப்படுமா?

 🌑 நீர் நிலை ஆக்ரமிப்பு அகற்றப்படும் எதிர்கட்சி தலைவரே ஆக்ரமிப்பு செய்து இருந்தாலும் அகற்றப்படும் என தீவிரமாய் அதிரடியாய் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன்.? 

தூத்துக்குடி லீக்ஸ் - 08-06-2022

தூத்துக்குடி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி ஸ்மார்ட் சிட்டி என மாவட்ட நிர்வாகம் அரசு அதிகாரிகள்  வெறுமே வாயால் முழக்கமிட்டால் போதாது? 


தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் பல பணிகள் ரொம்ப மெத்தனமாக மேம்பாலம் சுரங்க பாதை நான்கு வழி சாலை விரிவாக்கம் ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையம் என எதுவுமே ஆரம்ப நிலையில் இம்மி கூட நகரவில்லை அதற்கு இடைஞ்சலாக இருக்கும் ஆக்ரமிப்புகள் ? கோர்ட் மாநகராட்சி சாதகமாக தெரிவித்து பின்பும் சிலரின் ஆக்ரமிப்புகள் அகற்றப்படவும் இல்லை


தூத்துக்குடி மாநகரின் முக்கியமான மைய பகுதியில் நீர் நிலை ஆக்ரமிப்புகள் செய்து உள்ளார்கள்.



பாளை ரோடு தமிழ் சாலை

இன்று வரை தூத்துக்குடி மாநகராட்சி எதுவும் அகற்றப்படவில்லை. அச்சுறுத்தலா? அல்ல வேற எதுவுமா? என்றும் புரியவில்லை? என்கிறார்கள்.


தற்போது புதிதாக தேர்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி புதிய மேயர் ஜெகன் வயதில் இளைஞர் சுறுசுறுப்பானவர்

 எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் மாநகரம் ஸ்மார்ட் சிட்டி தேங்கி கிடக்கும் பணிகள் பல.. இதில் பாரபட்சமில்லாமல் ஆக்ரமிப்புகளை அகற்றிட செய்து முடிப்பாரா? மாட்டாரா?என புதிய மேயர் ஜெகன் பெரிய சாமி மீது தூத்துக்குடி பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஆவல் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.


நீர் நிலை ஆக்ரமிப்புகள்


1 தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை இடதுபுறத்தில் இருந்து பேரறிஞர் அண்ணா சிலை வரையும் ... பின்பு மாநகராட்சி நீரேற்றும் தொட்டியிலிருந்து அதிமுக ஆறுமுக நயினார் கடை வரையிலும் ...


பின்பு

அதே வரிசையில்   ஸ்டாண்டடு - ஹோட்டல் பேக்கிரி முதல் ஜயா ராவ்பகதூர் சிலை முடிய நிர் நிலை ஆக்ரமிப்புகள் உள்ளது அகற்றப்பட போவதாக தெரிவிக்கிறார்கள்.


ஆனால் இதுவரை தூத்துக்குடி மாநகராட்சி ஒன்றும் செய்யவில்லை இதில் சிலர்  சம்திங் ஸ்பெஷலாக (லட்சகணக்கில் செலவழித்து ) பட்டா பெற்று வைத்து இருப்பதால் ?

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி புதிய மேயரால் தங்களை ஒன்று மே அகற்ற முடியாது எளிதல்ல என்கிறார்கள்.

இப்படி பலமுறை இவர்கள் படம் போட்டு காட்டியதல்லாம் புரிந்து கவனித்து விட்டோம் இப்பவும் ..? வேற வேலையே இல்லையா கடுப்பாகிறார்கள்.


ஆக்ரமிப்புகளில் 200 கடைகள் மற்றும் அரசு ஊழியர் சங்க அலுவலகம் மூன்று அரசியல் கட்சி தங்கள் பெரிய அலுவலகம் செயல்படுகிறது.  மற்றும் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் ஆகியவை அடக்கம்.

மேற்படி உள்ளவர்கள் வருட கணக்கில் நீர் நிலை நிலங்களை ஆக்ரமித்துள்ளவர்கள் குறிப்பாக பலர் கோடிஸ்வ ராகவே இருக்கிறார்கள்



அடுத்து ஏவிஎம் ஆஸ்பத்திரியில் இருந்து நான்கு வழி சாலை  வர வேண்டும் என்கிறார்கள்.


முக்கிய ஆக்ரமிப்புகள் அண்ணா நகர் பாலம் வருவதற்கு இடைஞ்சலாக இருந்த வி.வி.டி சிக்னல்  தமிழர் கட்டியிடம் ஆக்ரமிப்பு பகுதியில் இதுவரை அகற்றப்படவில்லை நீதிமன்றம் மாநகராட்சி தெரிவித்ததை ஏற்று கொண்டது. அரசும் மாநகராட்சி உரிய இழப்பீடு அளித்து காலி பண்ண கூறியதாக தெரிவிக்கிறார்கள். 

பின்பும் அதற்கு உரியதை கொடுக்காமல் மாநகராட்சி காலதாமதபடுத்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.


அடுத்து சிதம்பரநகர் குறுக்கு தெரு ஒன்று முதல் நான்கு வரை உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றம் செய்யப்படவில்லை


முக்கியமாக கடற்கரை சாலை மதுரா கோட்ஸ் எதிர்புறமுள்ள ஆக்ரமிப்புகள்


இப்படி தூத்துக்குடி ஸ்டார் சிட்டி வளர்ச்சி திட்டத்தில் ஆக்ரமிப்புகள் அகற்ற வேண்டிய லிஸ்டில் இவையெல்லாம் உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக