செவ்வாய், 7 செப்டம்பர், 2021

சிமென்ட் ஆலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தூத்துக்குடியில் கனி மொழி எம்.பி. இடம் நேரில் மனு !!!


கனி மொழி MP. இடம் மனு 


எஸ்.கைலாசபும் கிராமத்தில் பொதுமக்கள் வசித்து வரும் பகுதிக்கு மிகவும் அருகில் JASAN INFRA P Ltd நிறுவனம் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க முயற்சித்து வருகிறது. 


இதற்கான கருத்துக் கேட்புக்  கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 12ம் தேதி கைலாசபுரம் கிராமத்தில் வைத்து நடைபெற்றபோது ஒட்டுமொத்த கிராம மக்களும் சிமெண்டு ஆலையை நிறுவ எதிர்ப்பு தெரிவித்தனர். 


1) Sகைலாசபுரம் கிராமத்தில் ஆலை அமையவிருக்கும் இடத்திற்கு 400 மீட்டருக்குள் TDTA  மேல்நிலைப் பள்ளி உள்ளது சுமார் 700 மாணவர்கள் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து இங்கு வந்து கல்வி கற்கிறார்கள், 


2) தொழிற்சாலை அமையவிருக்கும் இடத்தில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் 230  கிராமங்களுக்கும் விருதுநகர் மாவட்டத்திற்கும் குடிநீர் விநியோகிக்கப்படும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின்   நீரேற்று நிலையம் உள்ளது. ஆலை அமைந்தால் 230 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

 

3) தொழிற்சாலை அமைய உள்ள இடத்திற்கு அடுத்து 

கிராம மக்கள் பயனடைய 4 ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினமும் 20 கிராமங்களை சேர்ந்த கர்ப்பினி பெண்கள் உட்பட  150 கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


4) S கைலாசபுரத்தில் உள்ள  குளத்தின் கரையிலேயே ஆலை அமையும் இடம் உள்ளது   


5)தொழிற்சாலைக்கான தண்ணீர் தேவை அதிகம் என்பதால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் இதனால் பல கிராமங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 


6) சிமென்ட் ஆலையினால் ஏற்படும் அதிகப்படியான மாசு காற்றில் கலந்து புல் மற்றும் செடிகளில் படிந்து கால்நடை  மேய்ச்சல் மற்றும்  விளை நிலங்கள் பாதிக்கப்படும்  மேலும் நுரையிரல் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது.


7) ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன்டை ஆக்சைடு சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும். 


8) ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு சுகாதார சீர்கேட்டை உருவாக்கும்.  


9) ஆலை இயக்கப்படும் போது அதிகப்படியான சத்தமும்  பூமி அதிர்வும் ஏற்ப்படும் .


10) ஆலை அமைய உள்ள இடத்திலிருந்து 

0.8 KM க்குள் Sகைலாசபுரம் சவரிமங்கலம்  Sபுதுர் வரதராஜபுரம் செட்டியூரணி உமரி கோட்டை  ஆகிய ஊர்களில் மக்கள் வசிக்கும் வீடுகள் உள்ளது .


ஆலை நிர்வாகம் 

இனவ அனைத்தையும் மறைத்துள்ளது.


பொது மக்கள் பாதிக்கப்படும் அபாயத்தினை உணர்ந்து ஆலைக்கான  அனுமதி வழங்குவதை தடை செய்திட வேண்டி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மான்புமிகு கனிமொழி கருணாநிதி அவர்களை Sகைலாசபுரம்  சவரிமங்களம் S புதுர்  உமரி கோட்டை வரதராஜபுரம் செட்டியூரணி கிராமங்களை சேர்ந்த ஊர் பெரியவர்கள் Sகைலாசபும் CSI சபை குருவானவர்  தலைமையில் நேரில் சந்தித்து  (06-08-2021) மாலையில் மனு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக