தூத்துக்குடி லீக்ஸ்: 25.11.2020
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்த்தின் முக்கிய ' அவசர கால (Emergency Rescue team) பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர் - எட்டயாபுரம் காவல் நிலையத்தில் உள்ள மீட்பு படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை ( State Disaster Rescue Force ) பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு குழுவிலும் பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற வீரர்கள் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளை நன்கு தெரிந்த மற்றும் நீர், நிலைகள் பற்றி தெரிந்த உள்ளுர் காவலர்கள் உட்பட 50 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த பேரிடர் மீட்பு படையில் காற்றடைத்து இயந்திர விசையுடன் செல்லக்கூடிய படகுகள் (Inflattable boats), காற்றடைத்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் (Inflattable lights) வலுவான தூக்குப்படுக்கைகள் (Fortable Stretcher), முதலுதவி பெட்டி, ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள், நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக்கவசம், மரம் அறுக்கும் இயந்திரம், ஒலி பெருக்கி உட்பட 24 வகை உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை .வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ள பகுதிகளான எட்டயாபுரம், வேம்பார், ஆத்தூர், தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்களிலும் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு அந்தந்த பகுதி காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் தலைமையில் விரைந்து சென்று ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
எட்டயாபுரம் மற்றும் வேம்பார் ஆகிய இடங்களில் உள்ள இந்த பேரிடர் கால மீட்புக்குழுவினரையும், அவர்கள் வைத்துள்ள உபகரணங்களின் செயல்பாடுகளையும் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திடீரென ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட தலைமையிடங்களிலும் இது போன்ற சூழ்நிலையில் பொதுமக்களுக்கு உதவுவதற்கு காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலை பேசி எண். 100 அல்லது குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் ஆப் வசதியுடன் கூடிய ‘ஹலோ போலீஸ்” 95141 44100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக