வெள்ளி, 10 ஏப்ரல், 2020

மனசாட்சி சீனா பேரழகி கொரோனா சார்பில் "தூத்துக்குடி தமிழன்டா" புகழ் பத்திரிக்கையாளர் ஜெகஜீவன் 100 பேருக்கு மதிய உணவு வழங்கல்!!!

 தூத்துக்குடி 2020 ஏப்ரல் 10 தூத்துக்குடியில் மனசாட்சி சீனா பேரழகி கொரோனா என்ற அமைப்பை நடத்தி வரும் பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் பத்திரிகையாளர் ஜெகஜீவன் ,


தூத்துக்குடியில் தமிழன்டா என்ற நிகழ்ச்சி நடத்தி தமிழ் பாரம்பரியம் விளையாட்டு மற்றும் உணவு வகைகள்,வருங்கால தலைமுறைக்கு  
எடுத்து சொல்லும் வகையில்.. சிறப்பான நிகழ்ச்சி நடத்தி அந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் பங்கேற்று வாழ்த்து பெற்றவர். 

இவர்  மனித நேயத்தோடு செய்து வரும் காரியம் ஏராளம் சமூக ஆர்வலர் ஆகவும் ,ஏழை எளியவருக்கு உதவும் மனித நேயராகவும் ,சாதி மதம்  பாகுபாடு இன்றி அனைவருடன் அன்பாக பழகும் ,பன்முகம் கொண்ட வர் பத்திரிகையாளர் உலகாள்வோன்  (எ ) ஜெகஜீவன்.

  இன்று அவரது மனசாட்சி சீனா பேரழகி கொரோனா அமைப்பு சார்பில் தூத்துக்குடி பத்திரிகையாளர் ஜெகஜீவன் 100 பேருக்கு மதிய உணவு வழங்கினார்.


அவரது  மனித நேயப் பணி மென்மேலும் சிறக்க பொதுமக்கள்,பத்திரிகையாளர்கள் அனைவரும் அவரை பாராட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக