வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

தூத்துக்குடியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது!!

தூத்துக்குடியில்‌ கொலை, கொலை முயற்சி மற்றும்‌ பல்வேறு வழக்குகளில்‌
சம்மந்தப்பட்டவர்‌ குண்டர்‌ சட்டத்தில்‌ கைது.

தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச்‌ சேர்ந்த ஆறுமுகம்‌ மகன்‌ சீனு என்ற
இந்திரன்‌ (24) என்பவர்‌, தூத்துக்குடி கால்டுவெல்‌ காலணி 3வது தெருவைச்‌.
சேர்ந்த முத்துராஜா மகன்‌ சபரி என்ற செல்வக்குமாரை 26.10.2018 அன்று
ராஜபாண்டி நகரில்‌ வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கிலும்‌, 14.05.2019
அன்று கோரம்பள்ளம்‌, அந்தோணியார்புரம்‌ வேளாங்கன்னித்தெருவைச்‌ சேர்ந்த
குமார்‌ மகன்‌ ஜெயராஜ்‌ என்பவரை தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி எதிரில்‌
கொலை செய்ய முயன்ற வழக்கிலும்‌ மற்றும்‌ பல வழக்கிலும்‌ சம்மந்தப்பட்ட சீனு
என்ற இந்திரனை, தூத்துக்குடி காவல்‌ துணை கண்காணிப்பாளர்‌ திரு. பிரகாஷ்‌
அவர்களின்‌ நடவடிக்கையின்‌ பேரில்‌, தூத்துக்குடி மாவட்ட காவல்‌
கண்காணிப்பாளர்‌ திரு. அருண்‌ பாலகோபாலன்‌, இ.கா.ப அவர்களின்‌
பரிந்துரையின்‌ பேரில்‌ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ திரு. சந்தீப்‌ நந்தூரி, இ.ஆ.ப
அவர்களின்‌ உத்தரவின்‌ பேரில்‌ தென்பாகம்‌ காவல்‌ ஆய்வாளர்‌ திரு. ஜீன்குமார்‌.
அவர்கள்‌ சீனு என்ற இந்திரணை குண்டர்‌ தடுப்புச்‌ சட்டத்தின்‌ கீழ்‌
பாளையங்கோட்டை சிறையிலடைத்தார்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக