திங்கள், 20 ஜூலை, 2026

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா ஜூலை 26 ல் கொடியேற்றம் ஆகஸ்ட் 5 வரை கோலாகலம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by ரோஜா அருணன் 

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா ஜூலை 26-ல் கொடியேற்றம்: ஆகஸ்ட் 5 வரை கோலாகலம்

தூத்துக்குடி, ஜூலை 20:

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழா வருகிற ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்குகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் திருவிழா நடைபெறுகிறது.

thoothukudileaks


திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள், செபமாலை, நற்கருணை ஆராதனை, அன்னையின் திருவுருவ பவனி உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

thoothukudileaks


 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அன்னையின் அருளைப் பெற உள்ளனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி அன்புக் காலை திருப்பலியும், குழந்தைகளுக்கான புதுநன்மை திருவிழாவும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி செபமாலை, நற்கருணை ஆராதனை மற்றும் அன்னையின் மரியாதைப் பவனி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

thoothukudileaks


திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பக்தர்கள் ஒழுங்குமுறையுடன் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுமாறு பேராலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பெருவிழா நிர்வாக பொறுப்பாளர்கள்:

  • அதிபர்: அருட்பணி. ஜான் செல்வம்
  • உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. ஜெரால்டு
  • துணைத் தலைவர்: அன்டோ
  • செயலாளர்: எட்வின் பாண்டியன்
  • பொருளாளர்: ஜோ சார்ல்ஸ்
  • துணைச் செயலாளர்: பெனாட்
thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக