# கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தூத்துக்குடியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
தூத்துக்குடி: செப் 29
கடந்த 27.09.2025 அன்று கரூரில் நடைபெற்ற நடிகர் விஜய் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த 40 பேருக்கு தூத்துக்குடியில் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இது பற்றிய செய்தியாவது
கழக ஒருங்கிணைப்பாளர், கழக பொருளாளர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) எம்.எல்.ஏ. ஆணையின்படி இந்த அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
### அஞ்சலி நிகழ்வு
தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில்...
தூத்துக்குடி சிவன் கோயில் தேரடி அருகே வைக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வீடியோ 1 பார்க்க
### கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள்
மாவட்ட பொறுப்பாளர்கள்:
- மாவட்ட கழக துணை செயலாளர் பழனிச்சாமி பாண்டியன்
- மேற்கு பகுதி கழகச் செயலாளர் கே.எஸ். செல்லத்துரை
- மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன்
- மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல்
- மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தங்க மாரியப்பன்
- தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக செயலாளர்
இரா.இல. ஜெயராமன்
அணி தலைவர்கள்:
- மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன்
- மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆறுமுகத்துரை
- மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மாரியப்பன்
- வடக்கு பகுதி அம்மா பேரவை தலைவர் பொய்யாமொழி
இணைப் பொறுப்பாளர்கள்:
- மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜதுரை
- மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் செல்வராஜ், மந்திரம்
- மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் டி. வேல்சாமி
- மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சபிக்குமார்
உள்ளூர் பொறுப்பாளர்கள்:
- தாளமுத்து நகர் ஊராட்சி கழகச் செயலாளர் எம்.ஜி. முனியசாமி
- காமராஜ் நகர் ஜெபக்குமார்
- வட்டக் கழக செயலாளர் கருப்பு
உள்ளிட்ட பலர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டினர்.
### இரங்கல் செய்தி
கரூர் பொதுக்கூட்ட நெருக்கடியில் உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி, 29.09.2025


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக