புதன், 30 ஜூலை, 2025

சிபிஐ அதிகாரி போல் ஏமாற்றி ₹50 லட்சம் மோசடி: 3 பேர் கைது டிஜிட்டல் அரஸ்ட் பெயரில் மூதாட்டியை ஏமாற்றிய குற்றவாளிகள் சிக்கினர்

தூத்துக்குடி லீக்ஸ் 30 ஜூலை 2025, புதன்கிழமை

 தூத்துக்குடி:

 மூதாட்டி ஒருவருக்கு சிபிஐ அதிகாரி என்று வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்டு டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாக மிரட்டி ₹50 லட்சம் மோசடி செய்த 3 பேரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


மோசடியின் விவரங்கள்


தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு மர்ம நபர்கள் வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தினர். அவர்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் வங்கி கணக்கு ஒன்று உள்ளதாகவும், அதில் மனிதகடத்தல் வழக்கில் ₹2 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறினர்.

thoothukudileaks


மேலும் மூதாட்டியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யாமல் இருக்க ₹50 லட்சம் பணம் தருமாறு வற்புறுத்தினர். அச்சமடைந்த மூதாட்டி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ₹50 லட்சம் பணத்தை பரிமாற்றம் செய்தார்.


 புகார் மற்றும் விசாரணை


பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த மூதாட்டி NCRP (National Cybercrime Reporting Portal) இல் புகார் பதிவு செய்தார்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார் தொழில்நுட்ப விசாரணை மேற்கொண்டனர்.



கைதானவர்கள்


விசாரணையில் ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்:


1. பள்ளி பரமேஸ்வரராவ் (28) விசாகப்பட்டினம் (பள்ளி ராமு மகன்)

2. சுகந்திபதி சந்திரசேகர் (40) விஜயவாடா (சங்கர் ராவ் மகன்)

3. ஆடும்சுமில்லி சிவராம் பிரசாத் (43) - விஜயவாடா (ஜெகன்மோகன் ராவ் மகன்)


இவர்கள் 29.07.2025 அன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்


குற்றவாளிகளிடமிருந்து மொத்தம் 6 செல்போன்கள், ATM கார்டுகள், வங்கி கணக்கு அட்டைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.


 பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்:


- சிபிஐ, காவல்துறை அல்லது கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்று வாட்ஸ்அப் வீடியோ/ஆடியோ கால் மூலம் மிரட்டும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன

- இதுபோன்ற அழைப்புகளை உடனடியாக துண்டித்துவிட வேண்டும்

- சைபர் குற்ற புகார்களுக்கு உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்

- cybercrime.gov.in - (இதில் அழுத்தம் செய்க )

 இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்

- எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும்

thoothukudileaks
விழிப்புணர்வு ஒவியம் படம் 


சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடி லீக்ஸ் செய்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக