வெள்ளி, 30 மே, 2025

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் பற்றாக்குறை: பயணிகள் கடும் அவதி

 தூத்துக்குடி, மே 31

 தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி முற்றிலும் செயலிழந்து கிடப்பதால் பேருந்து பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

வெறும் காற்று தான் வருது?


குடிநீர் குழாய்களில் வெறும் காற்று மட்டுமே


பேருந்து நிலையத்தில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், தாகத்தால் அவதிப்படும் பயணிகள் குழாய்களைத் திறக்கும்போது குடிநீருக்குப் பதிலாக வெறும் காற்று மட்டுமே வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரே ஒரு குழாய்யும் பழுதடைந்த நிலை


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறநகர் காவல்நிலையம் முன்பு அமைந்துள்ள குடிநீர் குழாய் ஒன்று மட்டுமே இதுவரை சரியாக செயல்பட்டு வந்தது. 

ஆனால் கடந்த பத்து நாட்களாக அந்தக் குழாயிலும் குடிநீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது.





பொதுமக்கள் வேண்டுகோள்

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் வரும்படி ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அட?
இருந்த ஒன்னும் போச்சா???


 தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்துவதால், குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை அவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக