வெள்ளி, 6 டிசம்பர், 2024

ஊர்க்காவல் படையில் தேர்வு பெற்ற மீனவ இளைஞர்கள் 11 பேருக்கு பணி நியமன ஆணை தூத்துக்குடி எஸ் பி ஆல்பர்ட் ஜான் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Tamil Nadu updates,

தூத்துக்குடி செய்திகள்

06.12.2024


முகப்பு செய்தி

தூத்துக்குடியில் இன்று   ஊர்க்காவல் படையில் தேர்வு பெற்ற மீனவ இளைஞர்கள் 11 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது



இன்று!!

தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று (06.12.2024), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப  11 மீனவ இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.




11 இளைஞர்கள் ஊர் காவல் படைக்கு தேர்வு !!!

கடந்த 02.12.2024 அன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

நியமன ஆணை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த காவல்துறை கண்காணிப்பாளர்!!!

அவர்களுக்கு, மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று சிறப்பு நிகழ்ச்சியில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

வாய்ப்பு வரவேற்க தக்கது !!!

மீனவ சமூக இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது வரவேற்கத்தக்கதாக உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப   குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக