திங்கள், 1 ஜூலை, 2024

புதன் கிழமை தோறும் உங்கள் பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி முகாம் மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன்,இ.ஆ.ப அறிவிப்பு

  ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 1-7-2024 photo news 

by arunan journalist 

புதன் கிழமை தோறும் உங்கள் பகுதியில் மண்டலவாரியாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட தூத்துக்குடி மாநகராட்சி முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன்,இ.ஆ.ப  அறிவிப்பு   செய்துள்ளார்.

இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 



மேலும் ...

பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.


 இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ...

ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும்  மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மாண்புமிகு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

முதல் முகாம் !


இதன் முதல் முகாமானது வருகின்ற 3/7/2024 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது.


தூத்துக்குடி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட ( வார்டு எண்கள் 1 முதல் 14 மற்றும் 20 ) பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது. 


மேயர் ஜெகன் பெரியசாமி !

மேற்படி முகாமில்....

 சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், 

புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை மாண்புமிகு மேயர் ஜெகன் பெரியசாமி அளிக்கலாம். 


எனவே, ..

மேற்படி முகாம்களில் பொதுமக்கள் தாங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன்,இ.ஆ.ப  தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக