thoothukudileaks 17-3-2023
photo news by shanmuga sunthram
தமிழ்நாடு அரசு ஊரக மற்றும் ஊராட்சி த்துறை வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி கருங்குளத்தில் கால்நடைகளுக்கான மருத்துவர்கள் முகாம் நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் எல்லை நாயக்கன்பட்டி ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சமுதாய பண்ணை பள்ளி மூலமாக கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு திட்ட இயக்குனர் மாவட்ட செயல் அலுவலர் (பொறுப்பு) அறிவுறுத்தலின்படி வாழ்ந்து காட்டுவோம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திட்ட செயல் அலுவலர் ராதா தலைமை வகித்தார்.
முகாமில் கால்நடை மருத்துவர் கலந்து கொண்டு மாடுகளுக்கு தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்துகள் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமுதாய பள்ளி உறுப்பினர் அனைவருக்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக மாடு வளர்ப்பு பயிற்சி கையேடு மற்றும் கலப்பு தீவனங்கள் வழங்கப்பட்டது.
கருங்குளம் வட்டார திட்ட செயலர் பாக்கியலட்சுமி மற்றும் பவித்குமார் ஆகியோர் உள்பட சுற்றுவட்டார விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாட்டினை தொழிற்சார் சமூக வல்லுநர் மற்றும் ஸ்பார்க் செய்திருந்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக