புதன், 19 அக்டோபர், 2022

எடப்பாடி பழனிச்சாமி கூறிய பச்சை பொய் ?! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் இரக்கமற்ற அதிமுக ஆட்சி நடத்திய அந்தத் துப்பாக்கிச் சூட்டில் யார் யாரெல்லாம் குற்றவாளிகளோ அவர்கள் அனைவரும் உறுதியாக தண்டிக்கப்படுவார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

 அதிமுக ஆட்சியின் ஆணவத்துக்கும், எடப்பாடி பழனிசாமியின் எதேச்சதிகாரத்துக்கும் உதாரணமாக அமைந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தமிழ்நாட்டுக்குக் கரும்புள்ளி.





எதிர்க்கட்சித் தலைவராக அங்கு சென்றபோது, ஒலித்த துப்பாக்கிச் சூட்டின் சத்தமும், மக்களின் மரண ஓலமும், இன்றும் என் மனதை வாட்டுகிறது. துயரமும், கொடுமையும் நிறைந்த அந்தச் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.

இதுகுறித்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில், தூத்துக்குடி ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடப்பாறையை முழுங்கி விட்டு கசாயம் குடித்தான்’ என்பது போல, தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டில் நடந்தக் கொடுமையான தகவல்களை நேரடி வர்ணனை போல கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, ‘டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்’ என்று உண்மைக்கு மாறான தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பது விசாரணை அறிக்கையில் வெளியாகியுள்ளது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி ஊர்வலம் நடத்திய மக்கள் மீது திட்டமிட்டுத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பதை ஆணைய அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது.

இரக்கமற்ற அதிமுக ஆட்சி நடத்திய அந்தத் துப்பாக்கிச் சூட்டில் யார் யாரெல்லாம் குற்றவாளிகளோ அவர்கள் அனைவரும் உறுதியாக தண்டிக்கப்படுவார்கள். துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்துக்குக் கூடுதலாக ரூ. 5 இலட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக