வியாழன், 5 ஆகஸ்ட், 2021

கொலை செய்து தங்க நகை பறிப்பு மூதாட்டி முத்துக்கிளி கொலையில் கொள்ளையன் கைது!!! தூத்துக்குடி காவல்துறை தனிப்படை அதிரடி!!!!

 தூத்துக்குடி மாவட்டம்: 06.08.2021


ஏரல்  வாழவல்லான் மேலூர் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி மனைவி முத்துகிளி (74) என்பவரை கடந்த  03.08.2021 அன்று அதிகாலை அவரது வீட்டின் பின்புறம் வைத்து மர்ம நபர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு, அவர் அணிந்து இருந்த 9½  பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளார்.



இதுகுறித்து தகவலறிந்த ஏரல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.


இச்சம்பவம் தொடர்பாக ....

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன்  மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்  சண்முகசுந்தரம், முதல் நிலை காவலரகள்;  பொன்ராமசந்திரன்  முருகசுந்தரம், மாரியப்பன்,  சரவணகுமார், சந்தனமாரி மற்றும் காவலர்  பலவேச பார்த்திபன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து  எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினரின் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மாவட்டம் வாழவல்லான் மேலூர் பகுதியை சேர்ந்த முருகையா மகன் ஆறுமுகராஜ் (46) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. 


உடனே மேற்படி போலீசார்  அவரைக் கைது செய்து, அவரிடம் விசாரணை செய்ததில் மேற்படி  முத்துகிளியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றதை ஒப்புக்கொண்டார்.


மேற்படி எதிரி ஆறுமுகராஜ் திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 24.04.2018 அன்று கணவன், மனைவி ஆகிய இருவரை கொலை செய்து விட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கிலும், சென்னையில் ஒரு கொலை முயற்சி  வழக்கிலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



மேற்படி கொலை வழக்கில் எதிரியை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  வெகுவாக பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக