சனி, 11 ஏப்ரல், 2020

தமிழக அரசுக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை.!

பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் ரூ.500க்கு வழங்குவதாக அறிவித்துள்ள பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும

கொரானா வைரஸ் தடுப்பு  காரணமாக அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு மார்ச் 24 முதல் ஏப் 14 வரை கடைபிடித்து வருகின்றனர். இதன் மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. சமூகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள்  பெரும் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.


இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 19 வகையான மளிகை பொருட்கள் ரூ 500க்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே தினக்கூலி  வேலையிழப்பு மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஏதுமின்றி அரசு சார்பில் அறிவித்துள்ள ரூ 500 க்கான மளிகை பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள ரூ 500 க்கான மளிகை பொருட்களை இலவசமாக வழங்குவதோடு, அனைத்து நியாய விலை  குடும்ப அட்டைகளுக்கும் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களையும் ( கையுறை, கிருமி நாசினி, முககவசம், சோப் உள்ளிட்ட இதர பொருட்கள்) வழங்கிட முன் வர வேண்டுமாறு தமிழக அரசிற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

பெ.சந்தனசேகர்.
(மாவட்ட செயலாளர்)
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக