வியாழன், 11 ஜூன், 2026

கயத்தாறு அருகே இளம் பெண் மரணம்: "ஆணவக் கொலை" என பரவும் whatsapp தகவல்களுக்கு காவல்துறை மறுப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

 Tamil Nadu updates,

தூத்துக்குடி, ஜூன் 11:

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு மயிலோடை பகுதியில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட இணைய தளங்களில் "ஆணவக் கொலை" நடைபெற்றதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில், ..

தெற்கு மயிலோடை பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் கடந்த ஜூன் 9-ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, கயத்தாறு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணை, உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், உயிரிழந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது தாய் எஸ்தர் பாலின் (36) மற்றும் சகோதரர் சிவஞானம் (20) ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்

thoothukudileaks

.

விசாரணையில்,...

 உயிரிழந்த இளம் பெண் சமூக வலைதளத்தின் மூலம் ஒருவருடன் பழகி வந்தது தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடைபெற்றது தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது. 

இளம் பெண் கொலை வழக்கு!!!

மேலும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், இளம் பெண்ணின் மரணத்தில் அவரது தாய் மற்றும் சகோதரருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இச்சம்பவம் "ஆணவக் கொலை" என உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவித ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வதந்தி பரவியது!!!

 எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் "ஆணவக் கொலை" குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படாதவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

thoothukudileaks


உறுதி செய்யப்படாத மற்றும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய செயலாகும். இதுபோன்ற வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. :::

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக