Tamil Nadu updates12-3-2025
மாசிமக திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான விழா
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமக திருத்தேர் திருவிழா இந்த வருடமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அன்னம் பெற்றுச் சென்றனர்.
விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக வாழைக்காய் வியாபாரி சேட் மற்றும் சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி கலந்து கொண்டு அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
இந்த மாபெரும் அன்னதான விழாவின் ஏற்பாடுகளை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், தியானேஷ்வரன், கருணாநிதி, வெங்கடேஷ், மதியழகன், அர்ச்சகர் மஹா விஷ்ணு, சந்தோஷ், வினோத், கோபி, சரவணன், சக்தி, முகிலன், செந்தில் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவில் பக்தர்கள் ஆரவாரத்துடன் கலந்து கொண்டு இறையருளைப் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக