வியாழன், 14 டிசம்பர், 2023

டீன் மற்றும் ஆர் எம் ஒ பணி இடமாற்றம் தமிழக முதல்வர் நடவடிக்கை எதிர்பார்ப்பில் தூத்துக்குடி மக்கள் மற்றும் செய்தியாளர்கள்!!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் மற்றும் ஆர் எம் ஒ பணி இடமாற்றம் தமிழக முதல்வர் நடவடிக்கை எதிர்பார்ப்பில் தூத்துக்குடி மக்கள் மற்றும் செய்தியாளர்கள்!!!



 

தூத்துக்குடி அரசு மருத்துவமனை யில் நோயாளி யின் புண்கள் சுத்தம் செய்த கத்திரிக்கோல் உள்ளிட்ட உபகரணங்கள் ஒன்பது வயது சிறுவன் சுத்தம் செய்த சர்ச்சை வீடியோ வெளியானது...!!!

அதனை தொடர்ந்து மருத்துவமனை  டீன் சிவகுமார் புகாரின் பேரில் பிரபல நாளிதழ் நிருபரை காவல்துறை தூக்கி உள்ளே வைத்ததும் தூத்துக்குடியில் மெகா அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.




குறிப்பாக நாகரிகமான வார்த்தையில் அரசு மருத்துவ மனையில் நடை பெற்றதாக தவறை சுட்டிக் காட்டியவருக்கு நேர்ந்த அநியாயமாக தான்  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளோர் களால் பார்க்கப்பட்டது 


இதே போன்றே பலருக்கு ஏற்பட்ட சொல்ல இயலாத அனுபவங்களால்... 

அதனால் தான் அக் காணொளி மிக வேகமாக அதிக அளவில் வைரலாக பரவியது


வெறும் 20 ருபாய் கொடுத்து சிறுவனை நடிக்க வைத்து வீடியோ எடுத்து இருப்பார்கள் என இவ்வளவு மட்டமான கற்பனை யாருக்கும் வராது 

இந்த கற்பனைக்கு அவார்ட் தரலாம் 


தூத்துக்குடி அரசு

மருத்துவமனையில் நீர்ழிவு நோயாளியின்

புண்ணை சுத்தம் செய்த கத்திரிக்கோல்

உள்ளிட்ட உபகரணங்களை சிறுவன்

சுத்தம் செய்த வீடியோ வெளியானதை

தொடர்ந்து டீன் சிவக்குமார் விசாரணை

நடத்தினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி

மருத்துவமனைக்கு தினந்தோறும், 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 

மேலும், 600 க்கும்

மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும்

சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்

குறை, சுகாதார சீர்கேடு என தொடர்ந்து

பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி  தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்

குமார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு

சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


13-12-2023தினகரன் நாளிதழ் செய்தி 


கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பயிற்சி

பெண் மருத்துவர் ஒருவர் வேலைப்பளு

காரணமாக தனக்குத்தானே மயக்க

ஊசி செலுத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளது.


இந்நிலையில் தான் நேற்று முன்தினம் சிறுவன் மருந்துவ உபகரணங்கள் சுத்தம் செய்த வைரல் வீடியோ வும் அதனை தொடர்ந்து டீன் புகாரின் பேரில் நாளிதழ் நிருபர் அந்தோனி இன்ப ராஜ் தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்

இதனை தொடர்ந்து தூத்துக்குடி செய்தியாளர்கள் அனைவரிடமும் பரபரப்பு தொற்றிக் கொள்ள தென் பாகம் காவல் நிலையம் முன்பு குவிந்தார்கள்

அரசின் குறைபாடு களை சுட்டி காட்டுவது சாமானியனின் உரிமை அது பார்த்து மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நிலைப்பாடு 

இது காலம் காலமாக இருந்து வரும் அரசின் கொள்கை

ஆனால் சுட்டி காட்டுபவர் மீதே அடக்குமுறை கையாள்வதா ?

நிருபரை விடுவியுங்கள்

 என் ஒன்று திரண்டனர் சிலர் கொதித்து போராட்டம் ஈடுபடும் சூழ் நிலையில் ..


தூத்துக்குடி மாவட்ட எஸ் பி பாலாஜி சரவணன் அவரை சந்தித்து செய்தியாளர்கள் பேசினார்கள் 

அவர் பொறுப்பு உடன் பிரச்சினை கேட்டறிந்து ஒரு வழியாக அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தார்.

பாதிக்கப்பட்ட நிருபருக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் எதிர்ப்பு ஆலை ஸ்பான்ஸபர் சர்ச்சை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை பலவித சர்ச்சை களுக்கு ஆளாகி வருகின்றனர்


சர்ச்சை கள் வித்திட இங்கே நிரந்தர முதல்வர் என ஐம்பம்  கூறுவது போல?

நிரந்தர மாக மருத்துவ அதிகாரிகள் உள்ளார்கள் ஏழைகளின் குரல்களை காது கொடுத்து கேட்பதே இல்லை அலட்சியமாக தான் பேசுவர் 


தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிடம் மருத்துவர் ஆர் எம் ஒ சைரஸ் நீண்ட வருடமாக இருந்து வருகிறார்

பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் 

மருத்துவமனை டீன் கள் மட்டுமே மாற்றம் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுவர்

ரொம்ப பிஸி!!!

ஆனால் மருத்துவமனை உள்ளே சகலமாக இருக்கும் ஆனி வேறான இவர் இட மாற்றம் செய்யப்படவே இல்லை என்கிறார்கள்.

இவரை தூத்துக்குடி பொதுமக்களுக்கு நன்றாகவே தெரிகிறது



கிறிஸ்தவ மத போதகர் ரேஞ்சில் கிறிஸ்துவ பாடல் அவரது குரலில் பாடி ய யூடியூப் ல வலம் வருகிறார் அவ்வளவு பிஸியான பிரபலம் என்கிறார்கள்

இவர் பாடிய கிறிஸ்தவ பாடல்கள் 285 வீடியோ பார்க்க 


ஃபுல் சப்போர்ட்  அரசியல் தான் என்கிறார்கள் 


தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் சமுக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவரது புதல்வர் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பது தான் 

கூடுதல் தகவலாக சொல்கிறார்கள். 


தூத்துக்குடி மருத்துவ மனை கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் வசதி குறைகள் இல்லாத வாறு சீரமைப்பு செய்திட தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நலன் காக்கும் மருத்துவர்கள் இடம் பெற செய்திடல் வேண்டும் என தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரது எதிர் பார்ப்பாக இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக