ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

இந்து மதத்திலிருந்து...கிறிஸ்துவ மதம் மாறினால் 10 கோடி?!! ரூபாய் 5 லட்சம் மோசடி செய்து ஏப்பம் விட்ட பலே ஆசாமி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அதிரடி கைது நடவடிக்கை!!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

26-4-2024

Police news  


தூத்துக்குடி  கோவில்பட்டி யில் கிறிஸ்தவ மதம் மாறினால் ரூபாய் 10 கோடி ???

  சுமார் 5 லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது - சைபர் குற்ற பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு IMO என்ற செயலி மூலமாக



 சொக்கநாதன் என்ற IDல் இருந்து தொடர்பு கொண்டு பேசியவர்..!!!

 அவரிடம் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால்...

 ரூபாய் 10 கோடி பெற்று தருகிறேன் அதற்கு அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்? வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டடுள்ளார்.பலே ஆசாமி?


இவரும் இதனை உண்மை என்று நம்பி   தூத்துக்குடி கோவில் பட்டி இளைஞர் தனது ரூபாய் 4,88,159/- பணத்தை Gpay மூலம் அனுப்பியுள்ளார்.


பின்னர் தான் ஏமாற்றப்பட்டு பணம் ரூபாய் 5 லட்சம் மோசடி ஆனதை உணர்ந்தார்.


 உடனே மேற்படி இளைஞர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.


மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர்

ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

கைதான ராஜவேல்

தூத்துக்குடி மாவட்டம் சைபர் க்ரைம் டீம் தேடலில் சிக்கினான் 

 தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவர் மேற்படி பாதிக்கபட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதனையடுத்து மேற்படி போலீசார் நேற்று முன்தினம் (26.04.2024) தஞ்சாவூர் சென்று மேற்படி ராஜவேலின் வீட்டருகே வைத்து அவரை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டார்.

சிறையில் அடைப்பு 

அதன் பிறகு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர்.


 மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக